பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


அவனுக்கு என்னவோ போலிருந்தது. விருந்தோம் பலிலே பேர் பெற்றதாயிற்றே தமிழ் மண்... ஒரு எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து இவருக்கு விருந்து வைத்தல்லவா அனுப்ப வேண்டும்?... அது சரி பரீட்சை பண்ணிஞர். கடைசியில் ரிசல்டைச் சொல்லவில்லையே! பி. ஏ., பரீட்சை முடிவும் இவர் வெளியிடும் முடிவும் ஒரே நாள் பேப்பரிலேதான் வெளியாகுமோ, என்னவோ?’’ 'மாப்பிள்ளை' நாயகமுத்து அன்போடு அழைத் தாா. புவனநாதனுக்கு ஏகப்பட்ட ஆனந்தம்.

    • grass 6AT ostrio

'உங்க ஜாதகமும் எங்க மங்களநாயகி ஜாதகமும் கன கச்சிதமாகப் பொருந்திடுச்சு, உங்க அப்பாவையும் ஒரு வார்த்தை கலந்து எனக்குச் சொல்லுங்க, உங்க அப்பா விலாசத்தையும் கொடுங்க!”

  • நல்லதுங்க!”

பெரிய மனிதர், பெரிய மனிதர் என்று வந்து போன அவரின் பெயர் நாயகமுத்து. பட்டுச் சொக்காய்; ஜரிகைக்கரை வேட்டி தங்கமும் வைரமும் முகங் காட்டும் அணி வகைகள்: வெள்ளிமுடி; கடல் ஒத்த பங்களா, ஆடுதுறை வாழைக்காய் வியாபார மண்டி போல் பெரிய கார்; கருவேப்பிலையை நிகர்த்த ஒரே புதல்வி, பேட்டி காணப் பிரமுகர்கள், நட்சத்திரங்கள், போட்டியிடப் படங்கள்!-ஆகா, அவர் உலகமே தனி, அந்த உலகத்தின் உள்ளே இலக்கிய உள்ளமும் தனி, அவர் தனி மனிதர்!