பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-i 38 - திருவருட் சிந்தனை

உடலைப்பேற்ற கடமை என்ற அறிவினை அருள்க!

இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! மருந்தீசன்,

வைத்தியநாதன் என்றெல்லாம் திருப்பெயர் கொண்ட இறைவா! நோயற்ற உடல் தந்தருள் செய்க!

உடல் ஒரு உழைப்புக் கருவி! துகர்வுக் கருவி! எனது உயிரின் வளர்ச்சிக்கு உற்ற துணையாய் அமைந்த கருவி. இந்த உடல் வாழ்க்கை, பூரணமாய்ப் பயன் பெற வேண்டும்! இறைவா, கழியினி இல்லா யாக்கையை அருள் செய்க!

இறைவா, நோயில்லாமல் வாழ் ந் தால் மட்டும் போதாது. எப்போதும் என் உடல், உழைப்பிற்கு ஆயத்த மாய் இருத்தல் வேண்டும். எனது பொறிகள் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து உயிருக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும். :

இறைவா, உடலை நோயனுகாது தடுத்து அருள் செய்ய வேண்டும். இறைவா, அருள் பாலித்திடு நல்லுடல் நயந் தருள் செய்க எப்போதும் விழிப்பு நிலையில் உள்ள உடலினை அருள் செய்க!

ஒப்ாது உழைத்திடும் வலிமையை உடலுக்கு அருள் செய்க: உழைத்தல் தவம்: உழைத்தல் நோயனுகா பாது காப்பு நெறி: - - - -- “ ‘ “ --

உடல், நீ எழுந்தருளும் திருக்கோயில் உடலைப் போற்றுதல் என் கடமை என்ற அறிவைக் கொடு.

இறைவா, நோயனுகா வாழ்க்கை . r60 பழக்கு. என் ஆக்கமும் அழிவும் உடல் நலத்தில் இருக் கிறது. இறைவா, உடலைப் போற்றும் அறிவினைத் தந்தருள் செய்க: