பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருவருட் சிந்தன்னை

தீமையிலா, ஒருமைப்பாட்டுடன் வாழ அருள் செய்க!

இறைவா! எந்நாட்டவர்க்கும் இறைவா! நீ ஒரு விசித்திர மான தலைவன். நீ அன்பு: நீயே அன்புக் கருணைக்கடல்!

ஆயினும் உனக்குப் பன்னெடுங்காலமாகத் தொழும்பு, பூண்ட இந்த மானிட சாதியை ஏன் பகை மூட்டத்திற்குள் சிக்கித் தவித்து அழியும்படி செய்கிறாய்?

ஐயனே! எண்ணத் தொலையாத பிரிவினைகள்: பிரிவினை வழிப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த கசப்பு உணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி, பகைமை, கலகம், கொலை, இன்னோரன்ன தீமைகளில் இந்த மனித உலகம் அழிந்து கொண்டிருக்கிறது! இறைவா, உனக்குக் கருணை இல், லையா? எங்களைக் காப்பாற்று. -

மனித உலகில் எந்தப் பிரிவினையும் கூடாது. வேற்று மைகள் அனைத்தும் செயற்கை. மனிதனின் படைப்பு! இறைவா, உலகம் -மனித உலகம் வாழ ஒருமைப்பாடு தேவை ஒருமைப்பாடு உடைய மனித உலகத்தைக் கானும் ஆற்றலினை அருள் செய்க! - . o

இறைவா, நான் சார்புகளின் வழி அமையவன்! என் சுபாவம்கூட என் சார்புகளுக்கு ஏற்றாற்போல விளங்க வேண்டும். புதிய சார்புகளைப் பெறுதல் என்பது நின் திருவுள்ளம்! தீமைக்குக் காரணமாகிய தற்சார்புகளை நீக்கி. வாழ்ந்திட அருள் செய்க! - -

இந்த் உலகம் உன்னுடையது! இந்த உலகில் உள்ள அனைத்தும் உன்னுடைய உடைமைகளே! எனக்கிங்கே: என்ன அதிகாரம் வேண்டியிருக்கிறது? அதிகாரம் வேண் டவே, வேண்டாம். இறைவா! . . . . . . .

இறைவ்ா ஒருமைப்பாடே உன்னை வழிபடும் மந்திரம்: ஒப்புரவே உனக்குச் செய்யும் வழிபாடு:

ஒருமைப்பாடு, ஒப்புரவு ஒழுக்கங்கள்.என்.பால் அமைய அருள் செய்க இறைவா, ஒருமையுடன் நின் மலரடி போற்றி மகிழ்ந்து வாழ அருள் செய்க!