பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 37

பெருகு நிலையே குறிக்கோளாக அமைய அருள்க!

இறைவா, பெருந்தகையே பெறற்கரிய மாணிக்கமே போற்றி! போற்றி!! என்னைச் சுற்றி உலகம் இருக்கிறது, உயர்திணை உலகம், அஃறிணை உலகம் என்று! இந்தப் பரந்த உலகின் உண்மையை உணர்ந்து, உய்திக்கு உரியன தேர்ந்து, வாழ்க்கைக்குரிய மெய்ப் பொருளைக் கண்டு நான் வாழ வேண்டும்.

அஃறிணை உலகத்தின் இயல் கண்டு தேர்ந்து தெளிதல் எளிது ஐயனே. இந்த உயர்திணை உலகம் இருக்கிறதே அங்கு உண்மை காணல் அரிது. ஆயினும், வாழ்க்கைத் தொடக்கத்திலேயே உண்மை முழுதும் வெளிப்படாது. - . . . * ,w -

கண்டன கொண்டு காணாதன காணுதல் வாழ்வுமுறை. பெற்ற அறிவு கொண்டு பெறாத அறிவினைப் பெற முயற்சி செய்தல், பெறுதல்-இதுவே வர்ழ்க்கையின் பரிணாம வளர்ச்சி. . . . . . . . . . . * . . . . . - -

வாழ்க்கை, மாற்றங்களுக்குரியது, வளர்ச்சிக்குரியது. இவை இயல்பூக்கமாகவே நிகழும். ஆயினும், விழிப்பு நிலையில் இருந்து குறிக் கோள் வழிப்படுத்துதல் வேண்டும் இறைவா, அருள் செய்க! . . . . ‘. . ; நான் கிணற்றுத் தவ்ளை ஆகிவிடக்கூடாது. பீங்கான் தொட்டியில் வளரும் மீனாகிவிடக் கூடாது. நான் கண்டனவே காட்சி, பெற்றதே அறிவு; கொண்டதே கொள்கை என்று அமைந்துவிடக் கூடாது. மேலும் மேலும் தேடிப்பெற முயற்சி செய்தல் வேண்டும். வளத்தைப் பெருக்கி வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். - r. -

வையத்தின் வாழ்நிலை, என்றும் பெருக்கத்திற்குரியது. பெருகு நிலையே எனது. குறிக்கோனாக அமைய அருள் செய்க என்னுடைய ஞ்ானம் தேடும் பெருகிய வாழ்வில் உற்றமர்ந்து துணை செய்க: இறைவா, அருள் செய்க!