பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருவருட் சிந்தனை

திரிபுபடாத அன்பை அக்ப்பணிக்க அருள்க.

இறைவா, பேராளா! எம்பெருமானே போற்றி! போற்றி!! நான் நின் சந்நிதிக்கு நாள் தோறும் வருகின்றேன். உன்னை மனமுருகி அழைக்கிறேன். ஆயினும் பலன் ஏதும் கிட்டவில்லை. என் வஞ்சனை ஆறு வற்றிய பிறகல்லவா பக்தி புனல் பாயும். -

ஆம் இறைவா! நான் ஒரு மனிதனல்லன் இரு வேறு நிலையினை ஏற்கும். மீனிதனாக ஒரே போழ்து விளங்கு. கிறேன். இறைவா! எதிலும் இரட்டை மனப்பான்மை.

நான் எந்த ஒன்றுக்கும் உண்மையாக, நிலைப் பற்றாக விளங்குவதில்லை. அதுமட்டுமா? , வஞ்சனையையே பாற்சோறு போலக் கருதுபவன். இறைவா, இது மட்டுமா நான் எதையும் பயன் கருதியே செய்வேன். * . . . . .”

இறைவா, தின் சந்திதிக்கு வந்து நின்னைத் தொழுவது. கூடத் தன்னலப் பற்றோடுதான். நின் திருவருள் நலம் போற்றிய கண்ணப்பர் போல் நின்னைக் கருதியேயன்று. தின் நலம் கருதியதன்று இறைவா, என்னை மன்னித்தருள் ! என்னை வஞ்சனையிலிருந்து மீட்டு எடுத்தருள் செய்க! நான் எங்கும் எப்போதும் ஒரு நிலையினையே கடைப். பிடித்து ஒழுகும்படி அருள் செய்க -

இறைவா, என் வாழ் நாள் முழுவதும் , மற்ற உயிரினத்துக்குரிய நன்மைகளை தழச் செய்திடும் நல், வாழ்க்கையை அருள் செய்க!,

இறைவா, நீ எனக்கு நன்றருளுதல் வேண்டும். நீநன்றே செய்தாலும் சரி பிழையே செய்தாலும் சரி1 நான் இனி உன்னிடத்தில் வேறு குறிக்கோள் இல்லாததுசய அன்பையே காட்டுவேன்.

இறைவா, திரிபு படாத அன்பை நின் திருவடிகளில் அர்ப்பணிக்க அருள் செய்க! நின் அடியார் குறிப்பையே கடமையாகக் கொண்டு வாழ்ந்திட இறைவா அருள் செய்க!