பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

でチロー戸 திருவருனேக் கலம்பகம்

காரணம் பற்றி வந்தது. இறைவன் என்பது இறை என நின் றது; இறு பகுதி, : வினைமுதற்பொருள் விகுதியுமாம் ; எப் பொருளிலுந் தங்குதல் பற்றிக் கடவுளே இறை யென்பர் ; இறுத் தல் - தங்குதல்; அது ஈண்டு திருரு ை ம் ந்தப் பெருமானை யுணர்த்திற்று. அரசு என்பது சொல்லால் அஃறிணையும் பொரு ளால் உயர்தினையும் பெற்று வந்தது. பெருமாள் - பெருமான், பெருமை யுடையவன் ; இதில், பெருமை யென்ற பண்புப் பகுதி பீற்று ஐகாரம் மாத்திரங் கெட்டு, பெரும் என நின்றது ; ஆன்’ என்ற ஆண்பால் விகுதி ஆள் என ஈறு கிரிந்தது ; ஆள்’ என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்ததெனினுமாம் : அன்றிப் பெருமையை யாள்பவன் எனக் கொண்டால் ஆள் என்ற வினைப்பகுதி கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்து கெட்டதென வேண்டும். திருநாவுக்காசர் செந்தமிழிலேயே பாடிய காரணம்பற்றிச் செந்தமிழ்க் கரசென் முர் களபம் - கலவைச் சாந்து, பலவகை வாசனைப் பண்டங் களுங் கலந்த சந்தனம். புழுகு - புனுகு ; கஸ் தாரியுமாம். தம னியம் - தபயேம் என்னும் வடசொல்லின் திரிபு ; நெருப்பிற் சுடப்பட்டு விளங்குவது என்று பொருள்.

இது ஒன்று மூன்று ஐந்து கருவிளங்காய்ச் சீர்களும், இரண்டு நான்கு ஆறு கூவிளச் சீர்களும், ஏழு புளிமாச் சீரும், எட்டு கருவிளச் சீரும் வந்தது காலடியாகவும், அது நான்கு பெற்றது ஒர் அடியாகவும் வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட முப்பா னிரு சீ ராசிரிய வண்ண விருத்தம். தனதனன தந்தன

y

தனதனன தந்தன தனதனன தங்தன. தனஞ தனந்தன என்

பது சந்தக் குழிப்பாம். குற்றெழுத்து மிக்குப் பயிலுதலால், இது குறுஞ்சீர் வண்ணமாம் ; என்னை குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும்’ (தொல்காப்பியம்-செய்யுளியல்-சூத்

திாம்-உஉக) என்ரு ராகலின். -- (காட)