பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பெரியார் இயக்கம்’ என்னும் இதழாசிரியரும், பகுத் தறிவுச் செம்மலுமாகத் திகழ்பவர் தஞ்சை திரு. இரா. இரத்தினகிரி அவர்கள். பகுத்தறிவு தோய்ந்த பாங்கினர். உயிர்மூச்சாகப் பகுத்தறிவுப் பணி பூண்டவர். நிரல்பட நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில் திறனாளர். இந்நூற் பதிப்பில் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். திரு. பி. சிவானந்தம் பொறியாளர்; என்னருமை மாணவர். அடக்கத் தெளிவும், தொழில் ஊக்கமும் நிறைந்தவர். என்பால் அன்பு நிறைந்தவர்; இலக்கிய ஆர்வலர். அவரும் தம் பங்களிப்பை இந்நூற் பதிப்பில் வைத்தார். இருவர்க்கும் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும் உரியன வாகின்றன. .

பகுத்தறிவு முனைக் கருத்துக்களாக 20 தெளிவாக்கப் பெற்றுள்ளன. முனைக் கருத்துக்கள் அமைந்த பகுதிகளில் வலப்புறம் அறையமைப்பில் தொடர் எண்ணிடப் பட்டுள்ளன. நூல் நிறைவிலும் தொகுத்துக் காட்டப் பெற்றுள்ளன. .

பகுத்தறிவுக் கொள்கைகள் நடைமுறைப்படவேண்டும்’

திருவள்ளுவக் கோட்பாடுகள் கடைப்பிடிகள் ஆக வேண்டும். . .

தமிழ்ப் பண்பாடுகள் உலகளாவித் தழுவப்பட வேண்டும். -- . .

நூலில் புகுவோர் தம்மையும் சீர்தூக்கிப் பார்க்கலாம் ,

மக்களிடையே பரப்பியும் பயன் விளைக்கலாம்.

நன்றி, வணங்கி அமைகின்றேன்.

கலைக்குடில் அன்பன்,

தஞ்சாவூர் , 618 007. கோவை. இளஞ்சேரன்