பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பா யிரம் (பல்கலைப் புலவர் சா. வேதமுத்து. ) செந்நெல்லும் செங்கரும்பும் செந்தமிழ் எனச் செழித்தோங்கும் திருநெல்வேலித் திருப்பதிவாழ் சிந்தனைச் செல்வர் உயர் திருவாளர் ப. இராமசாமியவர்கள் உரு வாக்கிய "தி ரு வ ள் ளு வர் அறிவு ஆலயம்' என்னும் செம்மைசால் சிறுநூலைக், கையெழுத்திலேயே பார்க்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தமைக்கு யான் பெருமகிழ்வெய்து கிறேன். 'ஆசிரியர் திருக்குறளை நன்கு கற்று, உணர்ந்து அதன் வழியொழுகும் பண்பினர்; நன்றியறியும் பெருங்குணம் படைத்தவர்' - என்பது இந்நூலை மேலோட்டமாய்ப் பார்ப் பவர்க்கும் இனிது விளங்கும். திருவள்ளுவர்மீது அவர் கொண்டிருக்கும் பக்தி அளவு கடந்தது. திருவள்ளுவர்.பால் அவ்வளவு பக்தி கொண்டிருந்தும், அப்பக்தியைச் செயலாக்கும் முறையை கோக்குமிடத்து, அது, வீண்பக்தியாகவாவது மூடபக்தியாக வாவது செல்லுமாறில்லை.