பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 91

அனைவரும் இன்புற்றிருக்குமாறு திட்டம் செய்யும் காரியத்திற்கு அகில உலக மக்களும் நிதி வழங்குவது கடமையே. மேலும், ' திருவள்ளுவர் அ றி வு ஆலயம் ' என்று அதற்குப் பெயர் கொடுத்திருந்தாலும், அதில் உலக மேதைகள், மக்கள் நல்வாழ்வுக்காக உழைத்து இளைத்து மாய்ந்த மகான்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தும் திட்டமிருப்ப தால் எல்லா நாட்டு மக்களுக்கும் அவ்வாலயம் பொதுவானதே. ஆகையால், எல்லா நாட்டு மக்களும் திருவள்ளுவர் அறிவு ஆலயத்திற்கு நிதி வழங்கும் பொறுப்பை எடுத்துக்கொள் ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அறிவாலய நிதியும் அன்பர்கள் கடமையும் திருக்குறள் அன்பர்கள் தங்க ள் தொடர்புடையவர் களுக்கு எழுதுங் கடிதங்களில் அறிவாலயம் பற்றியும், அறிவாலய நிதி பற்றியும் எழுத மறக்க மாட்டார்கள். வியாபாரத் தொடர் புடையவர்கள் தங்களிடம் கொள்முதல் செய்யும் சிறு வியாபாரி களிடம் இந்நிதியைப் பற்றி எடுத்துக்கூறி ஒரு விகிதம் வாங்கிச் சேர்க்கலாம். மொத்த வியாபாரம் செய்யும் அன்பர்கள் விற்ற சரக்குகளின் பேரில் ரூபாய்க்கு இன்ன விகிதம் என்று போட்டு திருவள்ளுவர் அறிவாலயத்திற்கு நிதி சேர்க்கலாம். திருக்குறள் ஆராய்க்சிக் கூட்டங்களை நடத்துபவர்கள் தங்கள் தொடர்புடையவர்களுக்கு இந்நிதியைப் பற்றி எழுதுவார் கள்; சொல்லுவார்கள்.