பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

றப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்;
பிறப்பொழுக்கம்: குன்றக் கெடும்,

இ-ள்:- ஒத்து பார்ப்பான் மறப்பினும் கொளலாகும் - நூல்களைக் கற்பவன் (அவற்றை) மறந்தானாயினும் பின்னும் கற்றுக்கொள்ளலாம். ஒழுக்கம் குன்ற பிறப்பு கெடும்-ஒழுக்கம் குறையுமாயின் அவன் பிறப்பின் பயன் கெடும்.

[பிறப்பின் பயன் - மக்கட்பிறப்பை அடைந்ததனால் அடையும் பயன். பிறப்பு என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்.]

இது, கல்வியிலும் ஒழுக்கம் வலிதான வாறு கூறிற்று, ௧௩௩.

ழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

இ-ள்:- ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - ஒழுக்கத்தின் நின்று நீங்கார் அறிவுடையோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - (ஒழுக்கத்தைத்) தப்புதலால் குற்றம் வருதலை யறிந்து.

[படுபாக்கு என்பது தொழிற்பெயர்; பாக்கு - விகுதி.]

இஃது, அறிவுடையார் ஒழுக்கத்தினைத் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும். ௧௩௪.

ழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

இ-ள்:- ஒழுக்கம் உடைமை குடிமை - (ஒருவன்) ஒழுக்கம் உடையவனாக உயர்ந்த குலத்தானாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - (ஒருவன் ஒழுக்கத்தைத்) தப்புதலால் இழிந்த குலத்தானாம்.

ஒழுக்கத்தால் குலம் ஆகுமென்றும், ஒழுக்கமின்மையால் குலம் செடுமென்றும் இது கூறிற்று. ௧௩௫.

ழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

௫0