பக்கம்:திருவாசகத்தேன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 125

          பொருட் பற்றிச் செய்கின்ற
              பூசனைகள் போல் விளங்கச்
          செருப்புற்ற சீரடி
              வாய்க்கலசம் ஊனமுதம்
          விருப்புற்று வேடனார்
              கேடறிய மெய்குளிர்க் தங்கு
          அருட்பெற்று கின்றவா
              தேனோக்கம் ஆடாமோ !

(திருத்தேனோக்கம்- 3)
 

          கண்ணப்பன் ஒப்பதோர்
              அன்பின்மை கண்டபின்
          எண்ணப்பன் என்னொப்பில்
              என்னையும் ஆட் கொண்டருளி
          வண்ணப் பணித்தென்னை
              வாவென்ற வான்கருணைச்
          சுண்ணப்பொன் நீற்றற்கே
              சென்று தாய் கோத்தும்பி !
(திருக்கோத்தும்பீ- 4)


இன்றைய திருக்கோயில் வழிபாட்டு நிலையில் பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகளே பெருகி வளர்ந்து வருகின்றன. பொருட்பற்றிய பூசையிலும் கூடத் 'தான்' கெடாமல் செய்யும் பூசைகளே மிகுதி. தான் கெடாதது மட்டுமன்றித் தன்னுடைய தேவைகளை, இல்லை, இல்லை அவாக்களை அடுக்கி வைத்து அருள்பாலிக்கும்படி வேண்டிச் செய்யும் வணிகத் தன்மை வாய்ந்த பூசைகளே மிகுதி "வேண்டத்தக்கது அறிவோய்" என்றும் வேண்டுவதும் உந்தன் விருப்பன்றே!" என்றும் தொழுது அழும் பக்தர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை. இன்று எங்கும் அன்பு வழிபாடு அருகி, ஆசையினால் இயற்றும்