பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருப்பூவல்லி நாயின் கடைப்பட்ட நம்மையும்ஒர் பொருட்படுத்துத் தாயின் பெரிதும் தயாஉடைய தம் பெருமான் மாயப் பிறப்பு:அறுத்து ஆண்டான்என் வல்வினையின் வாயில் பொடிஅட்டிப்பூவல்லி கொய்யாமோ (3) பண்பட்ட தில்லைப் பதிக்குஅரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன்எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படை வீரபத்திரரால் புண்பட்டவா பாடிப்பூவல்லி கொய்யாமோ (4) தேன்ஆடு கொன்றை சடைக்குஅணிந்த சிவபெருமான் ஊன்நாடி நாடிவந்து உட்புகுந்தான் உலகர் முன்னே நான் ஆடி ஆடிநின்று ஒலம் இட நடம் பயிலும் வான்நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ (5) 454