பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருப்பூவல்லி சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே ஆராத ஆசை.அதுஆய் அடியேன் அகம்மகிழத் தேர்ஆர்ந்த விதிப் பெருந்துறையான் திருநடம்செய் பேரானந்தம் பாடிப்பூவல்லி கொய்யாமோ (18) அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண்டு இவ்உலகில் பிள்ளையும்ஆய் முத்தி முழுமுதல் உத்தரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ (19) மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ (20) 464