பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்திரண்டாவது கோயில் திருப்பதிகம் அனுபோக இலக்கணம் (தில்லை) ஆசிரிய விருத்தம் மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன்ஐந்தின் வழிஅடைத்து அமுதே ஊறிநின்று என்.உள் எழுபரஞ் சோதி உள்ளவா காண வந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறைஉறை சிவனே ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே (1) அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்த மாய்க்கசிந்து உருக என்பரம் அல்லா இன்அருள் தந்தாய் யான்.இதற்கு இலன்ஒர் கைம்மாறு முன்பும்ஆய்ப் பின்பும் முழுதும்ஆய் பரந்த முத்தனே முடிவுஇலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெருமானே சீர்உடைச் சிவபுரத்து அரைசே (2) 558