பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தேழாவது புணர்ச்சிப் பத்து அத்துவித இலக்கணம் (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் சுடர்பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து கடைபட் டேனை ஆண்டு கொண்ட கருணாலயனை கருமால் பிரமன் தடைபட்டு இன்னும் சார மாட்டாத் தன்னைத் தந்தஎன் ஆர்.அமுதை புடைபட்டு இருப்பது என்று கொல்லோளன் பொல்லா மணியைப் புணர்ந்தே (1) ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்துஜம் புலன் ஆய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி ஊற்று மணல்போல் நெக்கு நெக்கு உள்ளே உருகி ஒலம்இட்டுப் போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே (2)