பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தொன்பதாவது அருள்பத்து (அருட் பத்து) மகா மாயா சுத்தி (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே சுரிகுழல் பனைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெள் நீற்றாய் பங்கய்த்து அயனும்மால் அறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தம் மேவியசீர் ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (s) நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்உளோர் பிரானே ஒருத்தனிே உன்னை ஒலம்இட்டு அலறி உலகுளலாம் தேடியும் காணேன் திருத்தம்.ஆம் பொய்கைத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அருத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (2) 536