பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அருட் பத்து எங்கள் நாயகனே என்உயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே தக்கநல் காமன் தனதுஉடல் தழல்எழ விழித்த செம்கண் நாயகனே திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அம்கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (3) கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கு அரிய விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியகீர் அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (4) துடிகொள்நேர் இடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள் வான்தழலில் புள்ளிபோல் இரண்டு பொங்கு ஒளிதங்கு மார்பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர் அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (5)