பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தேழாவது திருவெண்பா அனைந்தோர் தன்மை (திருப்பெருந்துறை) நேரிசை வெண்பா வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய்உருகிப் பொய்யும் பொடிஆகாது என்செய்கேன்-செய்ய திருஆர் பெருந்துறையான் தேன்.உந்து செம்தி மருவாது இருந்தேன் மனத்து (1) ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்-தீர்ப்பரிய ஆனந்த மால்எற்றும் அத்தன் பெருந்துறையான் தான் என்பார் ஆர்.ஒருவர் தாழ்ந்து (2) Յ0Ց