பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே மின்இயல் நுண் இடை யார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே வினை முரன்றுஎழும் ஒசையில் இன்பம் மிகுந்திடும் ஆகாதே தன் அடி யார் அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே தான்.அடி யோமுட னேஉய வந்து தலைப்படும் ஆகாதே இன் இயம் எங்கும் நிறைந்து இனிது.ஆக இயம்பிடும் ஆகாதே என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தருளப் பெறிலே 838 (6)