பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. அச்சோப் பதிகம் பஞ்சுஆய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சுஆய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று அஞ்சேல்என்று அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (5) வெந்துவிழும் உடல்பிறவி மெய்என்று வினைபெருக்கிக் கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் விழுவேனைப் பந்தம்அறுத்து எனைஆண்டு பரிசுஅறஎன் துரிசும்.அறுத்து அந்தம்எனக்கு அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (6) தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையூவே கொடுபோந்து பாசம்எனும் தாழ்உருவி உய்யும்நெறி காட்டுவித்திட்டு ஒங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர்பெறுவார் அச்சோவே (7) சாதல்பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறிக் காதலின்மிக்கு அணிஇழையார் கலவியிலே விழுவேனை மாதுஒருகூறு உடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதிஎனக்கு அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (8) B53