பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. அச்சோப் பதிகம் செம்மைநலம் அறியாத சிதடரொடும் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்தான் நம்மையும்ஒர் பொருள்.ஆக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மைஎனக்கு அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (9) செத்திடமும் பிறந்திடமும் இனிச்சாவாது இருந்திடமும் அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எவ்வறிவோ ஒத்தநிலம் ஒத்தகுணம் ஒருபொருளாம் பெரும்பயனை அத்தன்எனக்கு அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (10) இச்செய்யுள் பழைய ஏட்டுப் பிரதியொன்றிற் காணப் பட்டதாக ஒக்கூர் திரு.வீரராம.நா.சாத்தப்ப செட்டியார் அவர்கள் தாது ஆண்டு பங்குனித்திங்கள் "செந்தமிழ்ச் செல்வி திங்கள் வெளியீட்டில் எழுதியுள்ளதாகும். o BGU