பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பி (6) சட்டோ நினைக்க மனத்து அமுதுஆம் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம் சிட்டாய சிட்டற்கேசென்று ஊதாய் கோத்தும்பி (7) ஒன்றுஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடு விட்டு நன்றுஆக வைத்து என்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என்தாதை தாதைக்கும் எம்.அனைக்கும் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பி (8) 4O6