பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 93


புறம் எனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சிவாய
சய சய போற்றி போற்றி
62

போக்கல்-போக்காதே. புயங்கனே-பாம்பை அணிந்தவனே.

சென்ற பாடலைப் போலவே இப்பாடலிலும் அவர் இறைவனைப் போற்றும் செய்தி தொடர்கின்றது.

சிவபுராணத்தின் முதலடியில் வரும் ‘நமச்சிவாய' என்ற சொல்லுக்குப் பொருள் எழுதும்போது இது இறைசொரூபம் என்று விளக்கப்பெற்றது. ஒளி வடிவான அந்தச் சொரூபத்தை எழுத்துக்களின் அதிர்வு அலைகளாக மாற்றினால், நமச்சிவாய என்ற எழுத்துக்களில் அடங்கும் என்றும் கூறியுள்ளோம். இங்கும் 'போற்றியோ நமச்சிவாய புயங்கனே' என்று கூறப்பெற்றதால் அந்தச் சொரூபத்தை முன்நிறுத்திப் 'புயங்கனே' (பாம்பை அணிந்தவனே) என்று விளிக்கின்றார். போற்றி என்ற வழுத்துதற் சொல்லை முன்னே பெய்துள்ளமையின் இவருடைய அன்பின் ஆழம் வெளிப்படுகிறது.

‘போற்றியோ' என்பதற்கு பதில் 'போற்றி ஓம்' எனப் பாடங்கொள்வாரும் உண்டு.

‘மயங்குகின்றேன். புகலிடம் பிறிதொன்றில்லை' என்ற சொற்கள் முழுவதுமாகச் சரணாகதி அடைதலைக் குறிப்பனவாகும். பின்னரும்,

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை
ஆட் கொண்டபோதே கொண்டிலையோ

(திருவாச. 502)

என்று கூறியுள்ளமையின் இங்குக் கூறப்பெற்றது முழுச் சரணாகதி என்று கூறுவதில் தவறில்லை.