பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 129



முன்ன-முன்னவனே. பின்ன-பின்னே. பன்ன-பலகாலும் சொல்ல.

‘உயிர்களின் பாவ நாசனே! மூவருக்கும் முதல்வனே! நின் சீர்கள் பாட நீ இருக்கும் இடத்திற்கு வருக என்று என்னை அழைப்பாயாக’ என்றவாறு.

104.

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு
ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூடவேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்
விட வேண்டும் நான் போற்றி விடு தந்து
அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே 100

விட அழிய, புழுக்கூடு-புழுக்களுக்கு உறைவிடமாகிய உடல்.

‘அன்பருக்கு அன்பனே நின் புகழைப் பாடவேண்டும் நான். வெறும் வாயில் இருந்துமட்டும் பாடல் வராமல் நெஞ்சு நெக்குநெக்கு உருகவேண்டும். அந்த உருக்கத்தின் பயனாக என்னை மறந்து ஆடவேண்டும். அம்பலத்தில் ஆடுகின்ற உன் மலர்போன்ற திருவடிக்கீழ் இணைய வேண்டும். உன் திருவடியில் இணையவேண்டுமாயின் அதற்கு இடையூறாக இருப்பது புழுக்கள் நிறைந்த இவ்வுடலே ஆகும். ஆகவே, இதனைப் போக்கி அருள்வாயாக என்பாலுள்ள பொய்களை யெல்லாம் நான் களையவேண்டும். உன் திருவடியாகிய வீடுபேற்றைத் தந்து அருள்வாயாக’ என்கிறார்.