பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 193



ஆற்றிலோ குளத்திலோ குளிக்கச்சென்ற இவர்கள் ணலில் ஒரு பாவை வடிவம் அமைத்து அதை வழிபட்ட பின்னர் நீராடலைச் செய்திருக்க வேண்டும். நாளாவட்டத்தில் இந்தப் பழக்கம் விரிவடைந்து சைவம், வைணவம் இரண்டிலும் இரண்டு வேறுபட்ட முறைகளில் வளர்ந்தது போலும். 'நாமும் நம் பாவைக்குச் செய்யும் வரிசைகள் கேளிரோ' என்று வரும் திருப்பாவைப் பாடலும் 'நெய்உண்ணோம் பால் உண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' (நாலாயிர: 475) என வரும் அப்பாடல் குதியும் வைணவ சமயத்தில் இப்பாவை வழிபாடு வளர்ந்த முறையைத் தெரிவிக்கின்றன.

சைவத்தைப் பொறுத்தமட்டில் பாவை வழிபாடு வெறும் பெயரளவில் நின்றுவிட்டதை அறிகின்றோம்.

5. ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடம் கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு ஏல் ஒர் எம்பாவாய் 1

போதார் அமளி-பூப்படுக்கை. ஏதேனும் ஆகாள்-பயன்படாது கிடந்தாள். ஏல் ஓர் எம்பாவாய்-எம்முடைய பாவைபோல்பவளே அதனை ஏற்றுக்கொள் ஆராய்ந்துபார்.

எவ்வளவு ஆழ்ந்த உறக்கமாயினும் பக்கத்தில் சத்தம் கேட்டால் உடனே எழுந்துகொள்வதுதான் மனித இயற்கை. தூக்கக் கலக்கத்தில் ஒசை வந்த திசையையோ அந்த ஓசையை உண்டாக்கியவர்கள் யார் என்பதையோ அறியமுடியாது. கண்ணாகிய பொறிக்கு இல்லாத சில இயல்புகள் செவிப்பொறிக்கு உண்டு.