பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


'தோழி! அனைத்தையும் அழிக்கும் மகா பிரளயத்தின் போதும், தான் ஒருவனாகவே நின்று அப்பிரளயத்தை ஏவுகின்ற முதல்வன், நாம் வணங்கும் இறைவன். அவ்வளவு பெரியவன் நமக்கு எங்கே அருள்செய்யப் போகின்றான் என்று கவலை கொள்ளாதே. நம்மைப் போன்ற பெண்ணாகிய ஒருத்திக்குத் தன் உடம்பிலேயே பாதியைத் தரும் வள்ளல் அவன். அத்தகையவனைப் பாடுவோம் வா’ என்றனர்.

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளலார் திருவாசகத்தில் நான் என்பதைக் கரைத்துக்கொண்டு மணிவாசகரிடம் ஈடுபட்டு, பன்னாளும் இப்பாடல்களைப் பாடி, இறுதியாகத் திருவாசகம் ஆகிய பழத்தைப் பிழிந்து சாறாக எடுத்தது 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை என்பதாகும். இந்தத் தொடர் முழுவதும் மேலேயுள்ள திருவெம்பாவைப் பாடலில் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை’ என்ற அடியில் அமைந்திருப்பதைக் காணலாம்.

கோழி சிலம்புவதும், குருகுகள் சிலம்புவதும் ஏதோ தங்களுடைய குரலை வெளிப்படுத்துகின்றன என்று கொள்ளாமல், கோழியும் குருகும் நாதஸ்வரமும் வெண்சங்கும் தங்களுக்கே உரிய முறையில் இறைவன் புகழைப் பாடுகின்றன என்று குறிப்புப்பொருள் காண்பதில் தவறொன்றுமில்லை.

163

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்