44 * திருவாசகம் – சில சிந்தனைகள் – 2
27.
ஆய நான்மறையவனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஒர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய்
அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இதுதான் நின் பெருமை அன்றே
எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே 23
தம்மை ஆண்டுகொண்ட குருநாதர் யார் என்பதை அறிந்துகொண்ட பிறகு அடிகளார் மனத்தில் தோன்றிய வியப்பு, அச்சம் என்பவற்றின் அடிப்படையில் பிறந்த கழிவிரக்கம் காரணமாக வெளிப்பட்டதாகும் இப்பாடல்.
‘நால்வேதத் தலைவனாகிய அவன், யாவரினும் கடையனாகிய என்னை, என் குறைகளை அறிந்தும் ஆண்டுகொண்டான் என்றால் ஏன் என்று புரியவில்லை. அடியார்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதா? அன்பன் என்று யான் சொல்லிக்கொண்டதால் என்னை ஏற்றுக் கொண்டானா? என்ற முறையில் மனத்தில் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்ற இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார். அவன் தம்மை ஆட்கொள்வதற்கு மேலே கூறிய காரணங்கள் எதுவும் பொருந்தவில்லை. எல்லையற்ற பெருமை உடையவனாகிய அவன், தம்பால் கொண்ட கருணையினாலேயே ஆண்டுகொண்டான் என்ற முடிவிற்கு வருகின்றார்.
28.
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்று என்றே பேசிப் பேசிப்
பூசின் தாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றி எம்ருெமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை