பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


37.மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை
எம் மதி இலி மட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனை சிக்கெனச்
சிவன் அவன் திரள் தோள்மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும்
நெக்கிலை இக்காயம்
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது
கேட்கவும் கில்லேனே 33


காயம்-உடல். சிக்கென உறுதியாக. கில்லேனே-ஆற்றாமையை உணர்த்தும் எதிர்மறை இடைச்சொல்.

‘இறைவனின் திருமேனியின்மேல் பூசப்பெற்ற திருநீறு அவன் திரண்ட தோளின்மேலும் இருக்கின்றதே. அத் திருநீறு என்றால் என்ன? சிந்தித்திருந்தால், ஊழிக் காலத்தில் அனைத்தையும் நீறாக்கினாலும், பின்னரும் அதனைத் தன் தோள்மேல் தாங்குகின்றான் என்பது தெரியும்.

அழித்தவர்களையும் நீறாக்கித் தன் தோளில் சுமக்கும் பரம கருணாமூர்த்தி அவன் என்பதை அறிந்தபின்னும் அவன்பால் நீ ஈடுபாடு கொண்டிலை, அறியாமை நிரம்பிய என் நெஞ்சமே கெட்டுப்போவதென்று முடிவு செய்து விட்டாய். உன்னோடு இருக்கின்ற நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.

38. கிற்ற வா மனமே கெடுவாய்
உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன்
விரை மலர்த் திருப்பாதம்
முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து
நீ உண்டன எல்லாம் முன் -
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும்
அளவு அறுக்கில்லேனே 34

கிற்றவாகெடுவாய்-முடிந்தவரை கெடுவாய்.