பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா குமுதமே திருவாய், குவளையே களமும், குழையதே இருசெவி, ஒருபால், விமலமே கலேயும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம், கமலமே வதனம், கமலமே நயனம், கனகமே திருவடி நிலை நீர், அமலமே ஆகில் அவர் 9-9 சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடுஞ், செந்தழல் உருவிற் பொலிந்து நோக்குடைய திரு துதல் அவர் S-2 திக்கடா நினைந்து நெஞ்சிடிந்(து) உருகும் திறத்தவர் புறத் திருந்(து) அலச, மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்ருெரு பிறவியிற் பிறந்து, பொய்க்கடா வண்ணங் காத்தென க்(கு) அருளே புரியவும் வல்லரே எல்லே, அக்கடா ஆகில் அவர் 9 - 7 திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம், மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை யுடை அரையர் தம் பாவை, தருமலி வளளுஞ் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக் குடியார், இருமுகங் கழல் மூன்(று) ஏழுகைத் தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே 1 5 - 5 தொழுது பின்செல்வ(து) அயன் முதற் கூட்டம் தொடர்வன மறைகள் நான் கெனினும், கழுதுனு கரிகா(டு) உறைவிடிம் போர்வை கவந்திகை கரி யுரி திரிந்துாண் தழலுமிழ் அரவங் கோவணம் பளிங்கு செபவடம் சாட்டியக் குடியார் இழுது நெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்(கு) ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 3-3 நீலமே கண்டம், பவளமே திருவாய் நித்திலம் நிரைத்(து) இலங்கினவே போலுமே முறுவன், நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம், ஒருவர் கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர், உண்ட(து) ஆலமே, ஆகில் அவர் 4 - 6 பதிக நான்மறை தும் புருவும் நாரதரும், பரிவொடுபாடு காந்தர்ப்பர், கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடியிருள் திருநடம் புரியும், சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக் குடியார், இதயமாங் கமலம் கமல வர்த்தக ைஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 5 - £ பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே திருவுடம்(பு) அதனில் தவளமே களபம். தவளமே புரிநூல், தவளமே முறுவல் ஆடரவம் துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்(கு) ஒருத்தி அவளுமே ஆகில் அவர் , 9.5