பொழிப்புரை - த கோவேந்தன் * 115
வெண்ணிலவு பொழிவதுடன் (புதைபடா) மறையாமல் கோவை யாகத் தொடுக்கப்படும் வெண்முத்து வரிசையை உள்ளே கொண்ட கொவ்வைப் பழம்போல் சிவந்த வாயின் முத்தம் அருள்!
கோதையே! மெய்ம்மையான திருப்பாவை பாடித்தரும் கோவை வாய் முத்தம் அருள்!
ஆழ்கடல் பல்கோடி அருணோத யப்புருட
ராகம் தழைத்தகோ மே
தகஇனம் தரமரக தத்துஅச் டர்ப்புற்ப
ராகம் தயங்குகோ வத்
தாழ்குழல் பொற்கும்ப விம்பவள முலைமலர்த்
தையல்அக வாதமார் பன்
தாமரைத் தவிசுளான் உச்சிவச் ராயுதத்
தலைவன்தன் உச்சிகொலை சார்
ஊழ்வினை தொடர்ந்தவரை அடுகின்ற ஆழ்நரக
ஊர்இயடி புரமன்னன் பான்
உச்சிதனில் மிதிதொண்டர் உச்சிவட மலைஎன்ன
உறைநீல மணியின் அருள் சேர்
கோழரைச் சண்பகச் சோலைசூழ் புதுவையாய்!
கோவைவாய் முத்தம்அரு ளே! கோதையே! மெய்த்திருப் பாவையா டித்தரும்
5. * * * É |
காவைவாய முததமஅரு கள (51)
ஆழ்கடலில் பிறந்த பலகோடி செங்கதிர் போன்ற ஒளியுடைய புரு டராக மணியும் ஒளி தழைத்த கோமேதக இன மணியும் தரமான மரகத மணியும் அழகிய சுடரையுடைய புற்பராக மணியும் விளங்குகின்ற கோலம் செய்த பொற் கும்பம் போன்ற ஒளிப்பிழம்பின் வளமுடைய முலைமலர் களையுடைய பெரிய பிராட்டியார் அகலாத மார்பினன்.
தாமரையில் உள்ளவன் உச்சியிலும் வச்சிராயுதத் தலைவனாகிய இந்திரன் தலையின் உச்சியிலும் கொலைத் தீவினை சார்ந்த ஊழ்வினை தொடர்ந்தவரைத் தண்டிக்கும் ஆழ் நரக ஊர் ஆகிய இயமபுரத்தின் அர சன் என்பவனது உச்சியிலும் (நாபலிட்டு உழிதருகின்ற) அறை கூவல்வி ட்டு மிதித்து நடனமிடும் தொண்டர்கள் உச்சியில், இதுவே