பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 136

பழைமையாகிய ஆரண மறையில் விளையாடும் இவளுடன் പ്രഥ புலி விளையாட வா அரனும் இந்திரனும் நின்று அடி தொழும் கோதையுடன் அம்புலி விளையாட வா!

புதியவண் தமிழ்மறைப் பொருளொடும் பழமறைப்

பொருளொடும் பழகும் உர வோர். புலமையைக் குறுகும்.அக இருளொடும் புறமிடப்

புற இருள் அகற்றுமுக மா - மதியம் உண்டு இவளிடத்து உன்னையும் புவனம்முழு

மதி.எனும் புறஇருள் அலால் - மனஇருள் அகற்றியிடு மெய்த்தவமும் எய்தலாம்

வைகுந்த வாழ்வுபெற லாம்.

கதியுடைத் ததியர்தம் மதியதா மரையையும் கைத்துணைக் கமலத்தை யும் கண்நெகிழ்த் தும்குவித் தும்சுடரும் இந்தமதி

கண்நெகிழ்ப் பதும் எய்த லாம்

அதிமதுர வண்தமிழ்ப் புதுவை ஆண் டாளுடன்

அம்புவி ஆடவா வே!

அரனும் இந்திரனும்நின்று அடிதொழும் கோதையுடன் அம்புலி ஆடவா வே! (Bf]]

பின்னைப் புதுமைக்குப் புதுமையாகிய நாலாயிர்த் தமிழ் மறைப் பொருளோடும், பண்டைய வடமறைப் பொருளோடும் பழகுகின்ற அறிஞர்களின் புலமையைக் குலைக்கக் குறுகுகின்ற அக இருளையும் L/s) இருளையும் புறமிடும்படி நீக்குகின்ற முகமாகிய பெரிய மதியம் இந்த ஆண்டாள் இடத்தில் உண்டு. -

உன்னையும் உலகம் முழுமதி என்னும், அந்தப் பெயருக்கு ஏற்ப நீயும் புற இருளைமட்டும் நீக்குவது அல்லாமல், உலகினரது மன இருளையும் நீக்குகின்ற மெய்த்தவமும் இவளிடம் வந்தால் அடையலாம். அது மட்டுமே! பொன் (வைகுந்த) நாட்டு வாழ்வும் நீ பெறலாம்.

புகலிடம் பெர்ற அடியார்களின் மதிய இதய மாகிய தாமரையை விரியச் செய்தும் இருகைகளாகிய தாமரையைக் குவியச்செயதும் ஒளிர் கின்ற இவள் முகமாகிய மதி மலர்வது போல் நீயும் மலர்ச்சி புறலாம்.