169 ல் பொழிப்புரை - த. கோவேந்தன்
பூமிசை இருந்தரீ புனையவே கற்பகப்
பூமாலை உதவாமை யால்
புல்லென்ற நின்முகப் புண்டரி கப்போது
பொலிவுறப் புள்ளரச னால்
ஏமமா ளிகைவாயி விற்பாரி சாதத்தை
இவ்வுலகு தனில்வைத்து ளான் இங்குநீ தமிவைக வேதரித் துத்தனி
இருப்பவனும் அல்லன்என் றால் காமர்தென் புதுவைஅந் தணர்பிரான் அருள்புதல்வி
காமநோன் பதுதவிர்க வே! காரிதரு மாறர்திரு மகளாய கோதையே!
காமநோன் பதுதவிர்க வே! (s10)
ஒளி கொண்ட நீண்ட இலை வடிவமான மூன்று துணிகளும் பிளவுகளும் கொண்ட வைரப்படை ஏந்திய இந்திரன், தேவர்களுடன் முப்பத்து மூவரும் அடிவணங்க வாழ்வு பெற்ற பொன்னுலகில் திருமால் சென்ற போது, நிலவுலகில், சத்தியபாமையாக இருந்த நீகூந்தலில் புனை வதற்கு கற்பகப் பூவாலாகிய மாலையைக் கேட்டான். இந்திரன் தரமறுத்து விட்டான்.
அந்த மாலை பெறாமையால், பொலிவு குன்றிய நின் முகமாகிய தாமரைப்பூ பொலிவு பெறுவதற்காகக் கருடனை ஏவி, பூ மட்டும் அல்ல, அந்தப் பாரிசாத மரத்தையே உன் காவலமைந்த மாளிகை வாயிலில் இவ்வுலகில் வைத்த காதலன் திருமால்.
உனக்காகப் பொன்னுலகப் பாரிசாதத்தையே கொணர்ந்தவன் இங்கு நீ தனியாக இருக்கப் பொறுத்து இருப்பானோ? இருக்க மாட்டான். ஆதலால் அழகிய புதுவை அந்தணர் அருளிய புதல்வியே! ஆண்டாளே காமநோன்பு தவிர் காரியார் திருமகன் நம்மாழ்வார்க்குத் திருமகளாகிய கோதையே காமநோன்பு தவிர்!
குளிறுவெண் திரைநள் எளிடைப்புணலை வெளிறுபடு
கொண்டல்மொண்டு உண்டுகரு கிக்
கோதண்ட மதுவளைத்து அண்டகோ எத்தில்
குழிஇக்கமஞ் சூல்உழந் தே