பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

திருவிளையாடற்புராணம்


"மனைவி?"

"அவள் பாதியாகி விட்டாள்"

"பிள்ளைகள்?"

"பெரியவன் கொழுக்கட்டைப் பிரியன்; சின்னவன் மயிலேறும் பெருமாள்"

"உன்னைப் பார்த்தால் பிள்ளைகுட்டிக்காரனாகத் தெரியவில்லையே"

"என்றும் இளமையோடிருப்பேன்; அதனால் தெரியாது”

"நான் இந்த நாட்டு அரசன்; என்னைக் கண்டால் நீ அஞ்சுவதாகத் தெரியவில்லையே"

"நாம் யார்க்கும் குடியல்லோம்"

"நாவுக்கரசர் போல் பேசுகிறாயே"

"தேவாரப்பாடல் கேட்டுப் பழக்கம்"

"கலையுள்ளம் படைத்த நீ கடமை செய்வதற்குத் தகுதியில்லை"

"இந்தக் கிழவி என்னையே வேண்டினாள்; அவள் வேண்டுகோளை மறுக்க இயலவில்லை".

"அதிகப் பிரசங்கியாக இருக்கிறாய் நீ கோயிலில் பிரசங்கங்கள் கேட்கும் பழக்கம் அவ்வளவுதான்".

"இங்கே வா" என்றான்.