இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168
திருவிளையாடற்புராணம்
"மனைவி?"
"அவள் பாதியாகி விட்டாள்"
"பிள்ளைகள்?"
"பெரியவன் கொழுக்கட்டைப் பிரியன்; சின்னவன் மயிலேறும் பெருமாள்"
"உன்னைப் பார்த்தால் பிள்ளைகுட்டிக்காரனாகத் தெரியவில்லையே"
"என்றும் இளமையோடிருப்பேன்; அதனால் தெரியாது”
"நான் இந்த நாட்டு அரசன்; என்னைக் கண்டால் நீ அஞ்சுவதாகத் தெரியவில்லையே"
"நாம் யார்க்கும் குடியல்லோம்"
"நாவுக்கரசர் போல் பேசுகிறாயே"
"தேவாரப்பாடல் கேட்டுப் பழக்கம்"
"கலையுள்ளம் படைத்த நீ கடமை செய்வதற்குத் தகுதியில்லை"
"இந்தக் கிழவி என்னையே வேண்டினாள்; அவள் வேண்டுகோளை மறுக்க இயலவில்லை".
"அதிகப் பிரசங்கியாக இருக்கிறாய் நீ கோயிலில் பிரசங்கங்கள் கேட்கும் பழக்கம் அவ்வளவுதான்".
"இங்கே வா" என்றான்.