பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 


இறை வணக்கம்

சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர

முத்தியான முதலைத் துதிசெயச்

சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ

சித்தியானைதன் செய்யபொற் பாதமே


(சத்தியும் சிவமும் ஆகிய பரம்பொருளைத் தொழுது பரவத் தூய சொற்களையும் பொருளையும் நல்குவன சித்தி விநாயகர் தம் செம்மையான அழகிய திருவடிகளே)