74
திருவிளையாடற்புராணம்
உதைக்கக் குழந்தைகள் இல்லை. மக்கட் செல்வம் தந்து என் துக்கத்தைப் போக்குவீர்" என்று கேட்டுக் கொண்டான்.
சித்தர் அருளால் நன் மகனைப் பெற்று விக்கிரமன் எனப் பெயரிட்டு அவனைப் பெரியோன் ஆக்கி ஆட்சியை ஒப்படைத்தான். பற்றுகள் நீங்கிப் பரமன் திருவடியில் விழுந்து சிவசக்தியோடு தானும் கலந்து முத்தியை அடைந்தான்.
சோம சுந்தரருக்கு அமைத்த இந்திர விமானத்துக்கு அருகே வடக்கே அழகிய ஒரு கோயில் கட்டிச் சித்தருக்கு உருவச் சிலை வைத்து விக்கிரம பாண்டியன் கிரமமாக பூஜித்து வந்தான். சைவம் தழைக்கச் சிவன் கோயில் திருப்யணிகள் செய்து வந்தான்.
அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டு அரசன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான்; அங்கிருந்த சமணர் அரசனைத் தூண்டி விட்டுப் பாண்டியனை அழிக்க வேண்டுதல் விடுத்தனர். அரசியல் காரணம் இன்றிப் போர் தொடுப்பது முறையன்று என எண்ணி அவர்களையே மந்திர சக்தியால் அவனை அழிக்கத் துணையாக்கினான். அழிவு தரும் வேள்வி ஒன்றைச் செய்து அதில் முரட்டு யானை ஒன்றைத் தோற்றுவித்தனர். இதளை 'அபிசார ஓமம்' என்பர். வேள்வியிலிருந்து உருத்து எழுந்த யானை படைத்தவர்கள் ஏவலைக் கேட்டுப் பாண்டிய நாடு நோக்கிப் பாய்ந்தது.