பக்கம்:திருவெம்பாவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடி ஆடுவோம் & 71

செய்த வினைக்கு அப்பொழுதே பயன் கிடைக்கலாம் பல காலம் கழித்துப் பயன் உண்டாகலாம். அடுத்த பிறவியிலும் வரலாம். முள் குத்தினுல் உடனே அவர்களுக்குப் பயன் தெரிகிறது. ஒருவனுக்குத் தவறு செய்தால் பல காலம் கழித்து அவன் இவனே எதிர்த்துத் தண்டிக்கிருன். வேறு வகையான செயல்களுக்கு எல்லாம் மறு பிறவிகளில் பலன் கிடைக்கின்றன. இப்படிப் பல வகையான வகையில் ஆன்மாக்கள் வளர்கின்றன. அப்படி வளர்த்து அவர்களே எடுத்து ஆதரவு செய்கின்ற பெருமாட்டி அம்பிகை. ஆதலின், பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை' என்கிருள். வளைகள் அணிவது மங்கலத்திற்கு அறிகுறி. ஆதலின் 'பெய்வளை' என்று சொல்கிருள். சிவ பெருமானைப் பாடுவதோடுகூட அம்பிகையையும் பாடு கிருர்கள். 'பெய்வளை தன் பாதத் திறம்பாடி' என்று சொல்கிருள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/72&oldid=579265" இலிருந்து மீள்விக்கப்பட்டது