223
223
தவம்:
உடலை வருத்தும் தவத்தை விலக்கிப் பகவானத்
தியானிக்குமாறு வற்புறுத்தல் ‘தவம்’ என்னும் கலம்பக
உறுப்பின் இலக்கணமாகும்.
"மானிடர்காள் கானிலுடல்
வாடப் பெருந்தவம் செய்(து) ஏனிடருற் றீர்?பணிவெற்(பு)
எம்பெருமான்- தானே தவமதுவே வீசுதுழாய்த்
தாமனடி உள்ளின் தவமதுவே யாவருக்கும்
grsir" 19: (கான்-காடு; இடர்-துன்பம்; பணிவெற்பு-சேஷா சலம்; தாமன் - மாலையையுடையவன்; உள்ளின் . தியானித்தால்.)
இதில், ‘எம்பெருமானை அடைவதற்கு விரோதியான உடல் தொடர்புகளை அறுத்துக்கழித்து எம்பெருமானப் பெறவேண்டுமென்று உடலை வருத்தித் தவம் செய்தல் வேண்டா; அடியார் பக்கல் மிக்க அருளுடையவளுகிய எமது திருவேங்கடமுடையானச் சென்று சேர்ந்து விரோதிகளனைத்தையும் போக்கப் பெறுவீர்” என்று தவம் விலக்கித் தண்ணளிசேர் அண்ணலிடம் தளர்வு இல் நினைவினரை ஆட்படுத்தும் தகவுடைமையைக் காண்கின்ருேம். குறம் :
தலைமகனிடத்துக் காதல் கூர்ந்த தலைவி அவனைப் பிரிந்திருக்கும்பொழுது செய்வது அறியாது மயங்கி
+
192. பாசுரம்-20.