பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

194

திரு.வி.க. இறந்த செய்தி அறிந்த பெரியார் ஈரோட்டிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். மவுண்ட்ரோடில் ஊர்வலத்தில் கலந்தார். ஊர்வலம் இராயப்பேட்டை சேர்ந்தது. பெருமழை பெய்தது. இரவு 7 மணிக்கு ஊர்வலம் மயிலை மயானம் சேர்ந்தது.

திரு.வி.க.வின் உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.

திரு.வி.க மறைந்தார்; மங்காத புகழ் பெற்றார். வாழ்க திரு.வி.க.