பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

5. ஸ்பென்ஸர் கம்பெனியும் வந்தே மாதரமும்

எத்தனை நாள்? எத்தனை நாள் இப்படி உண்பதும் ஊர் சுற்றுவதுமாகக் காலங்கழிக்க முடியும்?

கிராமத்திலிருந்து கெல் வருதல் கின்றது. கிராமம் போவாரிலர். அங்கே கேட்பாருமிலர். கலியான சுந்தரனரின் தமையனர் உலககாத முதலியார் ஒர் அச்சுக் கூடத்தில் வேலைக்கு அமர்ந்தார். அந்த அச்சுக் கூடம் மவுண்ட் ரோடில் இருந்தது. அந்த அச்சுக் கூடத்தின் பெயர் வைஜயந்தி அச்சுக்கூடம் என்பது. அவர் தம் ஊதியம் கொண்டு குடும்பத்தை கடத்துவது எங்ஙனம்? கலியாணசுந்தரனர் தாயார் பெரிதும் சிரமப் பட்டு எவ்வாருே குடும்பத்தை கடத்தி வந்தார்.

வருவாய் போதவில்லை. குடும்பத்தில் நெருக்கடி அதிகரித்தது. கலியாணசுந்தரம் எங்கேனும்வேலைக்குப் போகவேண்டும் என்பது தாயின் விருப்பம்,

என்ன செய்வார் கலியாணசுந்தரனுர்: லோயர் செகண்டரி பரீட்சை ஒன்றே.தேறியிருந்தார். புக்கீப்பிங் பரீட்சையும் தேறியிருந்தார். இந்த இரண்டு சர்ட்டிபி கேட்டுகளையும் வைத்துக்கொண்டு எங்கு போய் வேலை தேடமுடியும்? எவர் வேலை கொடுப்பார்: