பக்கம்:திரு அம்மானை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காதல் அனுபவம் 141 மலர்வேன்.அவன் அருள் செய்வான் என்ற உறுதி தோற்" றவே மலர்வேன். 'அவன் சிறிதே ஒளித்து நின்றபோது ஏங்கி வாட, அந்த வாட்டம் கண்டு மீட்டும் அவன் காட்சி" தருவான்; அப்போது மீட்டும் உள்ளம் தளிர்ப்பேன்" என்றும் பொருள் கொள்ளலாம். அனல் ஏந்தி ஆடுவான்..... - தன் திருக்கரத்தில் தீயை ஏந்திக் கொண்டு கடனமாடுபவன், ஆடுவான்; விணையாலணையும் பெயர். பாடுதும் பாடு வோம், காண்: அசை.) இறைவனிடம் காதல் கொண்ட மணிவாசக நாயகியார் அந்தக் காதலால் உண்டாகும் அநுபவங்களை இந்தப் பாட்டில் சொல்கிறார். - இது திருவம்மானையில் வரும் 17-ஆவது பாடல்..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/155&oldid=1418553" இலிருந்து மீள்விக்கப்பட்டது