பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

  • திரையுலகில் விந்தன் 5

முன்னுரை பழம்பெரும் எழுத்தாளர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள்

சினிமா சகல தரப்பினரையும் ஈர்க்கும் ஒரு வசிய சக்தியாக விளங்குகிறது.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டு, அல்லல் உறுகிற ஆண்கள், பெண்கள் எத்தனையோ பேர். அவர்களைப் போலவே, கதை எழுதுகிறவர்களும் கவிதை எழுதுவோரும் சினிமாத் துறையில் புகுந்து முன்னேற வேண்டும் என்று ஆசையோடு அலைவதும் சிரமங்கள் அனுபவிப்பதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாக இருக்கின்றன.

சினிமாத் துறையில் ஈடுபடுவதன் மூலம் புகழும் பணமும் இதர பல வாழ்க்கை சுகபோகங்களும் எளிதில் கிட்டிவிடும் என்கிற எண்ணமே இதன் அடிப்படைக் காரணமாகும்.

வெற்றி பெற்றுப் பிரகாசிக்கிற ஒருசில நடிகர் நடிகையரைப் பார்த்தும், எப்படியோ அடி எடுத்து வைத்து, சிரமப்பட்டுக் காலூன்றி வளர்ந்து பெயர் பெற்று ஒளிவீசுகிற கதை வசனகர்த்தா, பாடலாசிரியர் களைப் பார்த்தும், நாமும் இவர்களைப்போல் இடம் பெற்று, புகழோடும் பணத்தோடும் ஜாம்ஜாமென்று வாழமுடியும் என்ற ஆசையோடுதான் பலரும் சினிமா உலகில் பிரவேசிக்க முயல்கிறார்கள்.