பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மருத்துவர் ஒருவர் அங்கே வந்தார். 'தன்னால் நால்வரை எழுப்ப முடியாது ஒருவர்தான் எழுவர். யாரை நீ குறிப்பிடுகிறாய்? சுட்டிக்காட்டு' என்றார் மருத்துவர். 'சகாதேவன் அவனை எழுப்பித் தருக" என்று கேட்டுக் கொண்டான். 'அருச்சுனன் தானே மாவீரன்; அவனை இழந்து நீ எப்படி போரில் வெல்ல முடியும்' என்று கேட்டார் அவர். எந்த ஒரு தனிமனிதரை நம்பித் தருமம் வாழ்வது இல்லை; வெற்றி தருமத்தை ஒட்டித் தான் அமையும்; அதை நம்பித் தான் வாழ்கிறேன்" என்றான் தருமன்