இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
196 அருச்சுனன் அம்புக்கு அவன் இரையானான் அசுவத்தாமனைக் கண்ணன் ஏற்கனவே பிரித்து விட்டான், விதுரன் வில்லை இறுத்து முறித்து விட்டான். படைத் தளபதிகள் கருவம் மிக்கவர்கள் வீரம் பேசுவதில் விவேகம் இழந்தனர். எஞ்சி நின்றவன் துரியன்; அவன் மட்டும் அஞ்சவே இல்லை. அழிவு அவனுக்கு விழிப்பு ஏற்படுத்தவே இல்லை; வளையாத நெஞ்சு. போர்க்களத்தில் தன் படைகளைப் பலிகொடுத்தான்; உடன் பிறந்தவர்களை ஒழித்து முடித்தான்; சகுனி சாம்பல் ஆயினான். இறுதியில் அவன் பித்தம் பிடித்தவன் ஆயினான்; களத்தை விட்டு நீங்கி ஒரு குளத்தை அடைந்தான்