பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 "எப்படியும் அவர்கள் முகிலைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் உதயசூரியனாக வெளிக் கிளம்புவார்கள்' என்று அவன் நம்பினான். அரசர்களுக்கு எல்லாம் அறிவிப்பு அனுப்பினான்; 'துருபதன் திருமடந்தை அவளுக்குச் சுயம்வரம்' என்ற செய்தியை அறிவித்தார்கள். மன்னர்கள் என்ற பெயரோடு முடிதரித்தவர்கள் எல்லாம் அங்கு வந்து அடைபட்டனர்; போட்டியில் வென்று பரிசுபெற வந்தவர் சிலர்: காண்பதற்கு நுழைவுச் சீட்டுப் பெற்று இடத்தை அடைத்தவர் அவர்களிலும் பலர்; அந்த அவையில் வந்திருத மிகமுக்கிய மாணவர்கள் அவர்களை அருகிருந்து செவிலித் தாயர் அறிமுகம் செய்துவைத்தனர்; "அதோ வாய் திறக்காமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல் அமர்ந்திருக்கிறானே