பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈடுபாட்டை அறுதியிட்டுக் காட்டுவதாக உள்ளது.

இவ்விதம் பன்முகத் திறமையாளராக, பல்கலைச் செல்வராக, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனாராக வரலாற்றில் விளங்கும் இவரது விசுவரூபத்தை இந்த சிறு நூலில் விவரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆதலால் இவரை திறமையின் திருஉருவமாக மட்டுமே இந்த நூலில் சித்திரித்துக் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பெருமகனாரைப் பற்றிய செய்திகளையும், ஆவணங்களையும், சேகரிக்க முடியாத குறுகிய கால எல்லையில் கிடைத்துள்ள ஆவணங்களை கொண்டு இந்த மும்மணிகளது விழாவில் வெளியீடாக இந்த நூல் வெளியிடப்படுகிறது.

காலம் கனிந்து, அவரது இலக்கிய படைப்புகளும், ஒவியங்களும் மற்றும் பிற ஆவணங்களும் கிடைக்கப்பெற்றால் திருவருள் துணை கொண்டு மற்றுமொரு விரிவான நூலும் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

I 16