உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ஜில்லா மதுராந்தகத்தில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று இவனைக் 'காந்தளூர்ச்சாலைக் கல மறுத்தருளிய கோ இராச கேசரிவர்மன்' என்று கூறுகின்றது. ஆகவே, அவ்வாண்டிற்கு முன்னரே காந்தளூர்ப் போர் நிகழ்ந்ததாதல் வேண்டும். எனவே, இவன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 988 ல் சேரனையும் அவனுக்கு உதவிபுரியவந்த பாண்டியனையும் காந்தளூர்ப் போரிற் புறங்கண்டு வாகை சூடினான் என்பது தெள்ளிது. அவ் வெற்றியின் பயனாக இவன் அவ்வேந்தர்களின் இரு முடிகளையும் கைப்பற்றிக் கொண்டு மும்முடி சோழன் என்னும் சிறப்புப் பெயரும் எய்தினான். அந்நாள் முதல் அரசர்க்கரசன் என்று பொருள்படும் இராசராசன் என்னும் சிறப்புப் பெயரும். இவ்வேந்தனுக்கு உரியதாயிற்று. பிறகு, இப்பெயர் இவனுக்குரிய இயற்பெயராகவே வழங்கி வந்தது எனலாம். ஆகவே கி. பி. 988 முதல் இவன் வாணாள் முழுமையும் இராசராசன் என்றே வழங்கப் பெற்றனன் என்பது உணரற் பாலதாகும்.

இனி, இம்மன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பல்வகைப் பணிகள் புரிந்தமை பற்றித் தில்லை வாழ் அந்தணர்கள் கி. பி. 1004 ஆம் ஆண்டில் இவனுக்கு இராசராசன் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர் என்றும் அது முதல்தான் இராசராசன் எனவும் இவன் வழங்கப்பெற்றனன் என்றும் வரலாற்று ஆராய்ச்சி யாளருள் சிலர் கூறியுள்ளனர். அஃது எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. தில்லையம்பலத்திற்கு இராசராசன் திருப்பணி புரிந்தமைக்குரிய சான்றுகள் கல்வெட்டுக்களில் யாண்டுங் காணப்படவில்லை அன்றியும் இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 988 ஆம் ஆண்டிலேயே இவனுக்கு இராசராசன் என்னும் பெயர் வழங்கியது என்பது திருச் செங்காட்டங்குடி திருமால்புரம் என்னும் ஊர்களில் காணப் படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. ஆட்சியின் நான்காம் ஆண்டில் திருவெண் காட்டிலும்

1. Ins. 395 of 1922.

2.S. I. I, Vol. II, Introduction, pp. 13 & 14.

3. Ins. 56 of 1913; Ins. 306 of 1906.

4. S. I. I., Vol. V, No. 982.

வனது

,