உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

மற்றும் பல ஊர்களிலும் இராசராசன் ஆட்சியின் 29-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமையாலும் அவ் வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் கிடைக்காமையாலும் இவன் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தனன் என்பது நன்கு தெளியப்படும். எனவே, கி. பி. 1014-ஆம் ஆண்டில் இவன் இறைவன் திருவடியை அடைந்தான் என்பது தேற்றம். இவனது ஆட்சியின் 29-ஆம் ஆண்டாகிய கி. பி. 1014-ல் கும்பகோணத்திற்கு வடகிழக்கே மூன்றரை மைலில் காவிரியாற்றின் வட கரையிலுள்ள திருவியலூர்க் கோயிலில் இவன் துலாபாரம் புகுந்ததையும்' இவனுடைய முதற் பெருந்தேவியாகிய உலோக மாதேவி இரணிய கருப்பம் புகுந்ததையும்' நுணுகி நோக்குங்கால் அவை இரண்டும் இவனது வாழ்நாளின் இறுதியில் நடைபெற்ற அறச்செயல்கள் என்பது ஒருதலையாக உணரப்படுகின்றது. அவ்வாண்டு முதல் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களும் நம் தமிழகத்தில் யாண்டும் காணப்படு கின்றன. ஆகவே அவ்வாண்டில் இராசராசன் இறக்கவே, இராசேந்திரன் முடி சூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினன் என்பது தெள்ளிது.

இராசராச சோழன் பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கிய வனாதலின் அதுபற்றிப் பல சிறப்புப் பெயர்கள் இவனுக்கு அந்நாளில் வழங்கின என்பது கல்வெட்டுக்களால் உய்த்துணரக் கிடக்கின்றது. அவற்றுள், இராசராசன் என்ற பெயர் முன் விளக்கப் பட்டது. மற்றச் சிறப்புப் பெயர்கள் க்ஷத்திரிய சிகாமணி, இராசேந் திரசிங்கன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் நித்தவினோதன், இராசசிரயன், சிவபாதசேகரன்' சநநாதன், சிங்களாந்தகன், சயங்கொண்ட சோழன், மும்முடிச் சோழன்" இரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன், சோழேந்திர சிங்கன், சோழமார்த்தாண்டன்,

1.

சோழ வமிச சரித்திரச் சுருக்கம். பக். 16.

2. S. I. I., Vol. VIII, No. 237.

3. S. I. I. Vol. VIII., No. 222.

4. இராசராச சோழனது ஆட்சியின் மூன்று நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்களிலேயே இச்சிறப்புப் பெயர் காணப்படுகிறது.