உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

எழுதும் அலுவலில் அமர்ந்திருந்தவன். நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்திற்கு இவ்வேந்தன் ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாக அளித்த உத்தரவை எழுதியவன் இவனே யாவன்.

பல மண்டலங்களைத் தன்பாற்கொண்டு நிலவிய சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்ட ராசராச சோழன் காலத்தில் அரசியலில் பல துறைகளிலும் அதிகாரிகளாக அமர்ந்து அரசாங்க அலுவல்களைப் பார்த்து வந்தோர் பலர் ஆவர். அவர்களுள் மிகச் சிலரைப்பற்றிய செய்திகளே கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஈண்டு எழுதப்பட்டன.

இனி, இராசராச சோழன் வரலாற்றைக் கூறும் நூல் ஒன்று அந்நாளில் இருந்தது என்பது திருப்பூந்துருத்தியிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகிறது. அந்நூலின் பெயர் ‘ஸ்ரீ இராசராச விஜயம்' என்பது. அதன் ஆசிரியர் சவர்ணன் நாரணன் பட்டாதித்தன் என்பார். அது வடமொழியில் எழுதப்பெற்ற நூல் என்பது உய்த்துணரக்கிடக்கின்றது. அன்றியும் 'இராசராசேசுவர நாடகம்' என்ற நாடக நூல் ஒன்றும் இருந்தது என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டால் புலனாகிறது'. அது விழாக்காலங்களில் தஞ்சைப் பெரிய கோயிலில் நடிக்கப்பட்டி ருத்தலால் அந்நாடகம் தமிழ் மொழியில் எழுதப்பெற்றதாதல் வேண்டும். அந்நாடகம் இராசராச சோழன் தஞ்சையில் 'இராசராசேசுரம்' என்னுங் கோயில் எடுப்பித்த வரலாற்றைத் தன்பாற் கொண்டது போலும். அதனைத் தஞ்சை மாநகரில் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் நடித்தற்கு இரண்டாம் இராசேந்திர சோழன் நூற்றிருபது கல நெல் நிவந்தமாக அளித்திருப்பது அறியத்தக்கது. அவ்விரண்டு நூல்களும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவை கிடைப்பின் இராசராச சோழன் வரலாற்றில் பல அரிய செய்தி களை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

1. Annual Report on South Indian Epigraphy for 1930-31; para 12. 2. S. I. I., Vol. II, No. 67..