உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

201

மதுராந்தகத் தமிழ்ப்

4. பஞ்சநதிவாணனாகிய பேரரையன்: இவன் இராசேந்திர சோழனுடைய தண்ட நாயகர்கட்குத் தலைவன்; மதுராந்தகத் தமிழ்ப் பேரரையன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் மைசூர் இராச்சியத்தில் கங்கநாட்டுக் கல்வெட்டொன்றில்' குறிப்பிடப் பெற்றி ருத்தலால் அந்நாட்டை யாண்டுவந்த சோணாட்டுத் தலைவன் ஆதல் வேண்டும்.

5. வேளாளக்கூத்தன் ஆகிய செம்பியன் மூவேந்த வேளான்: இவன் இராசேந்திரனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; அரசனால் வழங்கப்பெற்ற செம்பியன் மூவேந்த வேளான் என்னும் பட்டம் உடையவன். அரசனது உத்தரவின்படி திருவாரூர்க் கோயிலில் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் முதலானவற்றைப் பொன் வேய்ந்து புகழ் எய்தியவன்.2

6. சேனாபதி சயங்கொண்டசோழ பிரமாதிராசன்: இவன் இராசேந்திரனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; அந்தணர் குலத்தினன். செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலத்தி லுள்ள ஒரு கல்வெட்டும் இவன் தாயார் காமக்கவ்வை என்பாள் அவ்வூர்க் கோயிலுக்கு இறையிலி நிலம் அளித்த செய்தியை உணர்த்துகின்றது.

7. உதயதிவாகரன் கூத்தாடியாரான வீரராசேந்திர மழவராயன்: இவன் சயங்கொண்ட சோழநல்லூர் என்னும் எருக்கட்டாஞ் சேரியில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு தலைவன். இவன் இராசேந்திர சோழனுடைய உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவன் என்பது இவன் அரசாங்க உத்தரவுகளில் கையெழுத் திட்டுள்ளமையால் புலனாகின்றது.4

1. Ep. Car., Vol. X, KL. 107.

2. Ins. 669 and 675 of 1919.

3. S. I. I., Vol. III, No. 29.

4. Ibid, No. 21.