உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

1

205

கண்காணித்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான். நம் வீரராசேந்திரன் முடிசூட்டு விழாவில் ஈடுபட்டுத் தலைநகரில் தங்கியிருந்த காலத்தில் விக்கிரமாதித்தன் தனக்கு அண்மையில் இருந்த கங்கபாடி நாட்டைக் கைப்பற்ற முயன்றனன். அதனை யறிந்த வீரராசேந்திரன் பெரும் படையுடன் புறப்பட்டுச் சென்று, சளுக்கிய விக்கிரமாதித்தனையும் அவன் மாசாமந்தர் களையும் போரில் வென்று, கங்கபாடிக் களத்தினின்றும் துங்கப்பத்திரை யாற்றிற்கப்பால் துரத்தினான்.' அதுவே, இவன் முடிசூடியபின் மேலைச் சளுக்கியரோடு நிகழ்த்திய முதற் போராகும்.

இனி, வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த கீழைச்சளுக்கியர் முதல் இராசராசசோழன் காலமுதல் சோழர்க்கு நெருங்கிய உறவினராகவும் அவர்களிடம் பெரும் பற்றுடையவராகவும் இருந்துவந்தனர். அதனால் வடபுலத்தில் அன்னோர்க்குப் பகைமை இல்லாமையோடு ஆதரவும் நட்பும் என்றும் நிலைபெற்றிருந்தன. அத்தகைய நிலையில் கீழைச் சளுக்கியரை எக்காலத்தும் வைத்துக்கொள்வதற்குச் சோழ மன்னர்கள் முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர். அந்நிலையில் மேலைச்சளுக்கியர் தம் தாயத்தினராகிய கீழைச் சளுக்கியர் வழிவழித் தமக்குப் பகைஞராயுள்ள சோழரோடு சேர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரிதும் வருந்தி, அவ்விரு வரையும் பிரித்துவிட்டுக் கீழைச்சளுக்கியரைத் தமக்கு உற்ற துணைவராக அமைத்துக் கொள்வதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப கி. பி. 1062-ஆம் ஆண்டில் கீழைச்சளுக்கிய மன்னனும் கங்கைகொண்ட சோழன் மருமகனும் ஆகிய இராசராச நரேந்திரன் என்பான் வேங்கிநாட்டில் இறந்தான். மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன் தன் ஆட்சியின் கீழ் வேங்கிநாட்டைக் கொணர்தற்கும் கீழைச் சளுக்கியரைப் பணிய வைத்துத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுவதற்கும் அதுவே தக்க காலமென்று கருதி, வனவாசியில் தன் பிரதிநிதியாக இருந்து கொண்டிருந்த மாதண்ட நாயகனாகிய சாமுண்டராயன்

1. Ep. Car., Vol. VII, SK. Nos. 11, 83 and 152.

2. S. I. I., Vol. III, No.20.